தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரை மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் அடுத்ததாக நடித்து வரும் படம் டான். சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் சேர்ந்து உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஜி நிறுவனம் பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இயக்குனர் அட்லியின் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி டான் படத்தை இயக்கி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே ஆவலாக மாறியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்து உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கும் படங்களை ஏதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிப்பதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் இந்த படத்தையும் லைகா புரொடக்ஷன் இணைந்தே வெளியிடவுள்ளார் இதையடுத்து டான் படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பிரபல டிவி ஒன்று தன்வசப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ‘ஜி நிறுவனம்’ சுமார் 30 கோடிக்கும் மேல் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சிவகார்த்திகேயன் படத்துக்கு இதுவரை கிடைத்திடாத ஒரு மிக பெரிய அங்கீகாரம் என்றே கூறப்படுகிறது. முன்னரெல்லாம் படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து தான் சின்னத்திரைக்கு வரும். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறி பாதி படத்திலையே அதன் உரிமத்தை விற்றுவிடுகின்றனர். இது அந்த ஹீரோ மீது அந்த உரிமையாளர்கள் வைத்து உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!