எந்த ஒரு விநியோகஸ்தரிடம் இருந்தும் ரீஃபிள் சிலிண்டரை பெற்றுக் கொள்ளளாம் – மத்திய அரசு

0

நாட்டில் அனைத்து விநியோகஸ்தர்களிடம் இருந்தும் ரீஃபிள் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த சேவை முதற்கட்டமாக எந்த பகுதிகளுக்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரீஃபிள் சிலிண்டர்:

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போதைய ஆண்டிலே அதிக அளவு மக்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இக்கால கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளின் விலை கடும் உச்சம் அடைந்து வருகிறது. இது மக்களை மேலும் வேதனை அடைய செய்து வருகிறது.

அந்த வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காஸ் சிலிண்டர் போன்றவை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ரீஃபிள் சிலிண்டர் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வரை நாட்டில் குறிப்பிட்ட விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே மக்கள் ரீஃபிள் சிலிண்டரை பெற்று வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் எந்த ஒரு விநியோகஸ்தர்களிடம் இருந்தும் ரீஃபிள் சிலிண்டரை பெற்று கொள்வதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை, கோவை, குர்கான், சண்டிகர், புனே, ராஞ்சி ஆகிய பகுதிகளில் இந்த புதிய நடைமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here