கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
படப்பிடிப்புகள் நிறுத்தம்..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் அனைத்து விதமான சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் பல ஹாலிவுட் நடிகர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |