தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமானது மஞ்சு விரட்டு. இதில் காளைகள் கழுத்தில் கட்டியுள்ள மஞ்சள் துணியை காளையர்கள் ஒன்று சேர்ந்து பிடித்து அவிழ்ப்பர். இது மஞ்சு விரட்டு ஆகும்.
இவ்விளையாட்டு நார்த்தாமலை (புதுக்கோட்டை மாவட்டம்), ஆதமங்கலம் புதூர் (திருவண்ணாமலை மாவட்டம்) மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் ஆவேசமாக வந்த காளை வழியில் வந்த தாய் மற்றும் மகனை பார்த்ததும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் ஒரே பாய்ச்சலில் தாண்டிச் சென்றது.
அவ்வளவு வேகத்திலும் அந்த காளையின் அந்த செய்ல் பலரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
சீறிப்பாய்ந்த காளைகள் சிம்மசொப்பனமாக பிடித்த வீரர் ரஞ்சித் – பரிசு மழை