சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் சென்னைக்கு திரும்பி விட்டனர். இதனால் வழக்கம் போல் விஜயா மீனாவை அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லி டார்ச்சர் செய்கிறார். இந்த பக்கம் முத்துவின் காருக்கு ஒரு பெண் சவாரி வருகிறார். அவர் ரோகினியில் பார்லரில் இறங்கிவிட்டு பணத்தை கொடுக்காமல் சென்று விடுகிறார். இதனால் முத்து பணத்தைக் கேட்க அந்த பார்லருக்குள் செல்கிறார். அப்போதுதான் முத்துவுக்கு பார்லர் பெயர் மாறிய விஷயம் தெரிய வருகிறது.
இது தெரியாத விஜயா தன் பெயரில் பார்லர் இருக்கும் விஷயத்தை நினைத்து பெருமையாக பேசுகிறார். இதை பார்த்து முத்து நக்கலாக சிரிக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்துவிடம் விஜயா எதுக்காக சிரிக்கிறாய் என்று கேட்பாராம். அப்போதுதான் ரோகினி பார்லரை வித்த விஷயத்தையும், அதற்கு வேறு பெயர் மாற்றிய விஷயத்தையும் சொல்வாராம். இதைக் கேட்ட விஜயா ரோகினியிடம் விசாரிக்க அவரும் உண்மையை ஒத்துக் கொள்வாராம். இதை வைத்து வீட்டில் அடுத்து என்ன பூகம்பம் வெடிக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
என்னது., லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!