சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தான் ஆசையாக வாங்கிய காரை விற்று விடுகிறார். இதனால் வருத்தத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இதை பார்த்த மீனா என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். இப்படி இருக்கையில் சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் மீனா தான் காரணம் என ரோகிணி, விஜயாவும் அவரை நாளுக்கு நாள் மட்டும் தட்டிக் கொண்டே இருக்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் ரோகிணி மீனாவிடம் வசமாக சிக்குவாராம். அதாவது அந்த PA ரோகிணி பணம் கொடுக்காததால் அவரைத் தேடி வீட்டுக்கே வந்து விடுவாராம். இதனால் அதிர்ச்சியாக ரோகிணி அவரை என்ன சொல்லி வெளியே அனுப்புவது என்று தெரியாமல் சமாளிப்பாராம். அதை மீனா பார்த்து விடுவாராம். பின் ரோகிணி இடம் இவங்க யாரு எதுக்கு இங்க வந்தாங்க என்று மீனா கேட்பாராம். உனக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. உன் வேலையை பாரு என சொல்லி விடுவாராம். இதனாலேயே மீனாவுக்கு ரோகிணி மேல் சந்தேகம் வர தொடங்குமாம்.