சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாள் அமைதியாக இருந்த விஜயா இப்போது ரோகினியின் அப்பாவை பார்க்க வேண்டும் என பிடிவாதம் செய்கிறார். இப்படி இருக்கையில் ஸ்ருதி ரவியின் தாலி பெருக்கு விழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதனால் ரோகினியிடம் விஜயா உன்னோட அப்பா இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ரோகினி மலேசியா மாமாவை போல யாரோ ஒரு நபரை தன் அப்பாவாக நடிக்க வைக்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினியின் அப்பாவாக வரும் அவர் செயல்களை பார்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருமாம். இதனால் விஜயா அவரிடம் துருவி துருவி பல கேள்விகளை கேட்பாராம். விஜயாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அந்த நபர் கடைசியில் உண்மையை உளறி விடுவாராம்.