தமிழகம் முழுவதும் மேல்நிலை வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.
இந்நிலையில் இத்தேர்வை எழுத மாநில முழுவதும் சுமார் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வினை 17,633 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.