தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய பிரபலம் ஒருவர் தனது திருமணம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பிரபல நடிகர் திருமணம்:
பகவதி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் விஜய்யின் தம்பியாக பிரபலமானவர் தான் ஜெய். அதன் பிறகு திரையுலகில் தலைகாட்டாமல் இருந்த ஜெய், சென்னை-28 படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
சுப்பிரமணியம் திரைப்படம் தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கண்கள் இரண்டால் பாடலை கேட்டாலே நம் கவனத்திற்கு வருவது ஜெய் தான். அழகர் கதாபாத்திரம் அனைவரையுமே கவர்ந்தது. இப்பொழுது சரியான வாய்ப்பு கிடைக்காமல் வெப்சீரிஸில் களமிறங்கியுள்ளார் ஜெய்.
அதுவும் அவருக்கு கைகொடுக்க பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜெய் கலந்துகொண்டார். அதில் அவரிடம் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிம்புவிற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
எப்படியும் சிம்புவிற்கு அடுத்த வருடத்திற்குள் திருமணம் முடிந்து விடும் என்ற கூடுதல் தகவலையும் கூறியுள்ளார் ஜெய். அப்படியென்றால் இவருக்கு அடுத்த வருடத்திற்குள் திருமணம் முடிந்து விடும் என்று நாசுக்காக கூறுகிறாரோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்