‘ரோஜா’ தான் என்னோட கடைசி சீரியல்’ – சிபு சூரியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூர்யன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

ரோஜா சீரியல்

சன் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ரோஜா சீரியல் வெற்றிநடை போட்டு வருகிறது. ரோஜா பற்றிய உண்மைகள் வெளிவருமா?? என பலரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். அதிலும் இந்த சீரியல் கதாநாயகன் சிபு சூர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டு தான் உள்ளனர். தற்போது மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. உண்மை தெரியவரும் காலமும் நெருங்கியுள்ளது.

ரோஜா அனாதை என்று இத்தனை நாட்கள் நினைத்துக்கொண்டிருக்க அனுவின் சதியால் ரோஜா பட்ட பாடையும் விளக்கும் நேரமும் வந்து விட்டது. ரோஜாவின் அம்மா பற்றிய தகவலும் தற்போது தெரிய போகிறது. இந்நிலையில் சிபு சூரியன் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் தற்போது கன்னட திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாராம். ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது இருந்ததற்கும் தற்போதும் நிறைய மாற்றங்கள் இருப்பதாகவும் அதனால் ரோஜா தான் தன்னுடைய கடைசி சீரியல் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here