விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் சந்தியாவின் நடத்தைக்கு காரணம் சிவகாமி தான் என்று நன்றாக அவரை திட்டி விடுகிறார்.
“ராஜா ராணி 2” சீரியல்
விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “ராஜா ராணி 2” இதில் அலியா மனசா, சித்தார்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ஹிந்தியில் பிரபலமாக ஒளிபரப்பான “என் கணவன் என் தோழன்” என்ற சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் மிக பெரிய கனவுடன் இருக்கும் ஒரு மனைவிக்கு ஒரு கணவன் எந்த வகையில் எல்லாம் ஊக்கமாகவும், அதே சமயம் ஆறுதலாகவும் இருக்கிறான் என்பதை அழகாக எடுத்து காட்டுகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி – ஏப்ரல் 28ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!!
தற்போது தமிழில் இந்த சீரியல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த சீரியலாக இருந்து வருகின்றது. இப்படியாக இருக்க, இந்த சீரியலில் தற்போது சந்தியா தனது மாமியார் சிவகாமியுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்லுகிறார். ஆரம்பத்தில் இருந்தே சிவகாமி சந்தியா அங்கு வர வேண்டாம் என்று கூறி வந்தார்.
காரணம், தனது மாமியார் சந்தியாவையும் அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்பதனையும் தெரிந்து கொண்டால் அவருக்கு கோபம் வந்து விடும் என்பதனால் தான். இப்படியாக இருக்க, தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் சந்தியா சிவகாமியின் மாமியாருடன் பேசுகிறார். அவரோ சந்தியா யாரோ என்று நினைத்து பேசுகிறார். பின், சிவகாமி வந்து எடுத்து சொன்னதும் அவருக்கு மிகவும் கோபம் வந்து விடுகிறது. காரணம், சந்தியா அவருக்கு எதிராக உட்கார்ந்து பேசி விடுகிறார். இதனை அடுத்து அவர் சிவகாமியை நன்றாக திட்டி விடுகிறார். இதனால் இனி பல பிரச்சனைகள் இது வைத்து வரும் என்று தெரிகிறது.