நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்கும் வகையில் தடுப்பூசி பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெறவுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாட்டில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றினை விரட்டுவதற்காக நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்னும் இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உடையவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுவரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசியால் மட்டும் தான் நாட்டில் இருந்து கொரோனா தொற்றினை விரட்ட முடியும் என்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Are you 18+?
On April 28 register for vaccination against #COVID19 on https://t.co/nvwSy5MXa5#LargestVaccineDrive Phase 3 – begins on May 1#Unite2FightCorona #LargestVaccinationDrive #IndiaFightsCorona @PMOIndia @MoHFW_INDIA pic.twitter.com/YxXswkVjSk
— Dr Harsh Vardhan (@drharshvardhan) April 22, 2021
காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் திருமண புகைப்படம்!!
தற்போது வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். தடுப்பூசியை பெற விரும்புபவர்கள் Cowin.gov.in என்ற தளத்திற்கு சென்று முன்பதிவை மேற்கொள்ளலாம்.