மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலையில் தற்போது இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 22) மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை நிலவரம்:
நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு தொழில்களும் முடங்கின. இதன் காரணமாக நாட்டின் பங்குச்சந்தை கடுமையான சரிவை கண்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து வகை தொழில்களும் மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீள தொடங்கியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் வரும் காலங்களில் மிக அதிக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் நாட்டில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறி ஆகி விடும்.
குழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ் – “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி!!
இந்நிலையில் தொடர்ந்து சரிவை கண்டு வந்த பங்குசந்தை தற்போது இன்றைய நிலவரப்படி மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அதன்படி இன்றைய(ஏப்ரல் 22) நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 48,081 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110 புள்ளிகள் அதிகரித்து 14,406 புள்ளிகளில் தற்போது வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ளது.