இந்திய அணியின் இளம் வீரர், ரோஹித் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷுப்மன் கில் கோபம்!!
T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முழு விவரம் அண்மையில் வெளியானது. இந்த அணியில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், தினேஷ் கார்த்திக் போன்ற இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரரான ஷுப்மன் கில் இடம்பெறவில்லை. மேலும் சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கூட சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த ஆட்டத்தினால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. இதனால் ஷுப்மன் T20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இடம்பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் T20 உலக கோப்பையில் ஷுப்மன் இடம்பெறாததற்கு ரோஹித் தான் காரணம் என அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் ஷுப்மன் விளையாடும் விதம் ரோஹித்துக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவரின் பெயரை BCCI க்கு ரோஹித் பரிந்துரைக்கவில்லை. மேலும் ரோகித் சர்மா மற்றும் டிராவிட் கூட்டணி வந்த பிறகு நன்றாக விளையாடி கொண்டிருந்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரவில்லை என சில விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனால் தான் ஷுப்மன் கில் ரோஹித் மீது கடும் கோபத்தில் உள்ளார்.