முதுகு வலி காயத்தால் பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்டில் விலகி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் தொடரில் விளையாடுவது கேள்வி குறியாகி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடரில், இந்திய அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் முதுகு வலி காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்ததடுத்த டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். ஆனால், இவர் விளையாடி உள்ள 4 இன்னிங்ஸிலும் 4, 12, 0 மற்றும் 26 என சொற்ப ரன்களிலேயே வெளியேறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கிடையில், கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதுகு வலியால் அவதிப்பட்ட இவர், போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால், இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 17ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரில் பங்குபெறுவது கேள்வி குறியாகி உள்ளது. இவர், பங்கு பெறாத நிலையில், 3 வீரர்கள் இவரது இடத்தை பிடிப்பதற்கு போட்டியிட்டு வருகின்றனர்.
ISL: பெனால்டி ஷாட்டில் வீழ்ந்த மும்பை சிட்டி…, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி!!
அதில், இலங்கைக்கு எதிரான தொடரில், காயம் காரணமாக விலகிய சஞ்சு சாம்சன் தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் பெற்றுள்ளதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரை தொடர்ந்து, ஆல் ரவுண்டரான தீபக் ஹூடா மற்றும் ரஜத் படிதார் இவர்களும், ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை பிடிப்பதில் முன்னிலை பெற்று உள்ளனர்.