தொகுப்பாளர் வில் ஸ்மித்தின் மனைவியை கேலி செய்ததால் மேடையில் வைத்தே தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆஸ்கரில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் அமைப்பு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
ஆஸ்கரில் பங்கேற்க தடை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்தவாரம் நடைபெற்றது. அதில் ”கிங் ரிச்சர்ட்” படத்திற்காக நடிகர் வில் ஸ்மித்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி கேலியாக பேசினார்.
ஸ்மித்தின் மனைவி ஏற்கனவே அலோபேசியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முடி அனைத்துமே கொட்டி மொட்டை தலையுடன் தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
தொகுப்பாளர் கிண்டல் செய்ததுமே ஸ்மித்தின் மனைவி அழுதிருக்கிறார். உடனே வில் ஸ்மித் கோவத்தை குறைக்க முடியாமல் தொகுப்பாளரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது தொகுப்பாளரை மேடையில் வைத்து அறைந்ததிற்காக ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்