சைவ மற்றும் அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான பிரியாணியில் இருக்கும் ஆபத்து குறித்து சில விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரியாணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் ஒன்று தான் பிரியாணி. அந்த அளவுக்கு பிரியாணிக்கு அடிமையாகாத ஆட்களே கிடையாது. பிரியாணி என்று சொன்னாலே நமக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஏனென்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம் அந்த பிரியாணியின் சுவை தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் நமக்கு பிடித்த பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம் அதாவது இரவு நேரங்களில் அதிக அளவு பிரியாணி சாப்பிடும் போது நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது நமக்கு வயிறு மந்தமாக பசி இன்றி காணப்படும். அதேபோன்று பிரியாணியில் அதிக கலோரிகள் இருப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
இது தவிர இரைப்பை குடல், இரைப்பை அலர்ஜி, இரைப்பை புண் போன்ற வியாதிகளும் இந்த பிரியாணியினால் ஏற்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனை அனைத்தும் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டு வருபவர்களுக்கு மட்டும் தான். வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் பிரியாணியால் நமக்கு எந்த ஆபத்து கிடையாது. எனவே பிரியாணி பிரியர்கள் சற்று கண்ட்ரோலாக இருப்பதே உடலுக்கு நல்லது.