தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இதில் சீனியர் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணியில் இடம் பெறவில்லை. தவான் கடந்த 2022 டிசம்பரில் இந்தியாவுக்காக விளையாடினார்.
அதன்பிறகு இஷான் கிஷன் மற்றும் ஷுப்மான் கில் போன்ற இளம் வீரர்கள் அணிக்கு ஓப்பனிங் செய்து வந்தனர். இதில் இருவரும் இரட்டை சதங்களை அடிக்க, மற்ற வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது. இவரை போலவே அஸ்வின், புவனேஷ்குமார் போன்ற மூத்த வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான தகவலின் படி ஷிகர் தவான் விரைவில் ஓய்வு பெற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Enewz Tamil WhatsApp Channel
சீன இணையதளங்களை தடை செய்யும் இந்திய அரசாங்கம்?? வெளியான முக்கிய தகவல்!!