நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் துன்பப்படும் மக்களின் துயரை துடைக்கும் ஒரு தொண்டு நிர்வாகியாக மாற போவதாக தெரிவித்துள்ளார்.
இனி என்னோட பாதை இது தான்:
போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக மும்பை நகர போலீசாரால் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை விசாரித்த நகர நீதிமன்றம் இவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து இவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சிறையில் இவருக்கு அளிக்கப்பட்ட கவுன்சிலிங்கில், தான் சிறையில் இருந்து வெளியே வந்து கஷ்டப்படும் மக்களின் துயர் துடைக்க பாடுபட இருப்பதாகவும், மற்றவர்கள் என்னை பார்த்து பெருமை படும் படி நடந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இனி தீய வழிகளில் செல்ல மாட்டேன் எனவும் கவுன்சிலிங்கின் போது தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்