தற்போது இன்றைய பங்குச்சந்தை முடிவுக்கு வந்துள்ளது. அதில் இன்று மாலை நிலவரப்படி பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை:
தற்போது கொரோனா காலத்தில் இருந்து நம் நாடு மீண்டு வருகிறது. மேலும் தற்போது அனைத்து தொழில்களும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதாக கூறுகின்றனர். மேலும் இதன் காரணத்தினால் பங்குசந்தையில் தொடர் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது இன்று மாலை நிலவரப்படி பங்குச்சந்தை வீழ்ச்சியில் முடிந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புள்ளிகளில் 434.93 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன்படி 50,889.76 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்தது. இது மொத்த வர்த்தகத்தில் 0.86 சதவீதம் சரிவாகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தை மற்றும் குறியீட்டு எண் நிஃப்டி 137.20 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன்படி தற்போது 14,981.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. இது மொத்த வர்த்தகத்தில் 0.91 சதவீதம் சரிவாகும்.
கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘எருமசானி’ ஹரிஜா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!
மேலும் சென்செக்ஸ் புள்ளி பட்டியலில் இருக்கும் முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் வெறும் 9 நிறுவனங்களின் பங்குகள் தான் ஏற்றம் பெற்றுள்ளது. இன்று மாலை நேர நிலவரப்படி மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவை தான் கண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஓஎன்ஜிசி 5.06 சதவீதமும், எஸ்பிஐ 3.77 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 3.59 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.20 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த நான்கு நாட்களில் மொத்தம் சென்செக்ஸ் 1,250 புள்ளிகள் சரிவை கண்டுள்ளது.