பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்தி வாசுதேவன் குறித்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
சக்தி:
பிரபல இயக்குனர் வாசுதேவனின் மகன் தான் சக்தி. இவர் தமிழ் சினிமாவில் “தொட்டால் பூ மலரும்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சரண்யா, மகேஷ் போன்ற படங்களில் நடித்தார். இது போன்ற பல படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் தான், ராகவா லாரன்ஸ் நடித்த “சிவலிங்கா” படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து ஓவியாவை கடுமையாக பேசியதால் இவருக்கு வோட்டிங் ரேட் குறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.
இப்படி இருக்கையில் சக்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. அந்த வீடு எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. மேலும் அங்கு இருந்தவர்களால் நான் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளேன் என பேட்டியில் ஆதங்கமாக கூறியுள்ளார். இந்த விஷயம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.