நடந்து முடிந்த இந்தியா, இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த ஆண்டு T20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து சீனியர் வீரர்கள் T20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ரோஹித் சர்மா கூறுகையில், பணிச்சுமை காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறோம். விரைவில் T20 அணிக்கு திரும்புவோம் என கூறினார்.
சர்வதேச அளவில் டாப் 5ல் நுழைந்த விராட் கோலி…, தொடரும் சாதனை பட்டியல் இதோ!!
இதைத்தொடர்ந்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “2024ம் ஆண்டுக்கான T20 உலகக்கோப்பை போட்டியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதால் இலங்கை தொடரில் பங்குபெற்ற இளம்வீரர்களே நியூசிலாந்து தொடரிலும் பங்கு பெற உள்ளனர். அதற்காக சீனியர் வீரர்கள் T20 போட்டிகளில் ஆடமாட்டார்கள் என இல்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சமன் அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.