வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (நவம்பர் 29) முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருவதால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியை தண்ணீர் நெருங்கி வருவதால், 15,000 கன அடி நீர் திறக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடையாறு முகத்துவாரத்தில் தண்ணீர் தடையின்றி கடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதால், சென்னைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
வடகிழக்கு பருவமழை எதிரொலி – சென்னையில் 8 விமானங்கள் ரத்து – வெளியான முக்கிய அறிவிப்பு!!!