வடகிழக்கு பருவமழை எதிரொலி – சென்னையில் 8 விமானங்கள் ரத்து  – வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில முக்கிய பகுதிகளில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து. மேலும் சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உள்ளிட்ட 15 விமானங்கள் கால தாமதம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here