உலகெங்கும் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் ஆளில்லாத கார்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் பேருந்தை ஸ்காட்லாந்து நாடு முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சென்சார் உதவியுடன் இயங்கும் இப்பேருந்து மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் வருகிற திங்கள்கிழமை முதல் எடின்பரோவில் இருந்து 14 மைல் சுற்றளவில் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல இருப்பதாக பேருந்து நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ச்சீ.., குடி,சிகரெட்னு குதூகலமாக இருந்த நயன்தாரா.., திருத்திய கணவர்.., உண்மையை உடைத்த பயில்வான்!!
அதே நேரத்தில் இந்த தானியங்கி பேருந்துகளுக்கு இதுவரை முழு அளவில் அனுமதி வழங்காததால், பாதுகாப்பு ஓட்டுநராக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஒருவர் பணியமர்த்த உள்ளனர்.