இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது அதிரடியாக விளையாடி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளது. அதாவது, இதுவரை 11 போட்டிகளில், 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் கம்பிரமாக முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடம் முதன் முதலாக ஐபிஎல்லில் களமிறங்கிய இந்த அணி, சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பிறகு, ரோஹித் சர்மா இல்லாத நேரங்களில், ஹர்திக் பாண்டியா இந்தியாவின் டி20 அணியை வழி நடத்தி, அதில் பல வெற்றியும் கண்டார். இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை மட்டும் ரோஹித் சர்மா வழி நடத்துவார் என பிசிசிஐ அறிவித்த நிலையில், டி20 கேப்டன் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து, ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் ஆவார் என பலரும் தெரிவித்து வந்தனர்.
ச்சீ.., குடி,சிகரெட்னு குதூகலமாக இருந்த நயன்தாரா.., திருத்திய கணவர்.., உண்மையை உடைத்த பயில்வான்!!
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வெற்றி கேப்டனான ரவி சாஸ்திரி, ஐபிஎல் 2023ல் சில திறமையான இளம் வீரர்கள் இருப்பதால், இந்தியா புதிய டி20ஐ அணியைக் உருவாக்க கூடும் என தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு, இதற்கான முழு வேளையில் பிசிசிஐ இறங்கும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த அணியை ஹர்திக் பாண்டியாவே வழி நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.