தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி நேரங்களை, மாநில அரசுகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிகள் செயல்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாநில சட்டசபையிலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி!!
இதையடுத்து பள்ளி செயல்படுவதற்கான நேரங்களை மாற்றி அமைத்துள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என 6 மணி நேரம் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கான புதிய கால அட்டவணை, கடந்தாண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.