என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி!!

0

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் D51 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் தான் ராயன். இது அவரின் 50வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து  கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை பார்த்த அபர்ணா பாலமுரளி ஓர் முக்கிய கருத்தை கூறியிருக்கிறார். அதாவது ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக தனுஷ் சாருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்களின் தீவிர ரசிகையாக இருக்கும் நான் உங்களுடன் சேர்ந்து வேலை செய்திருப்பதன் மூலம் என் கனவு நினைவாகிவிட்டது. நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் சார் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிலிண்டர் மட்டுமல்ல இனி மின்சாரமும் இலவசம்., நாளை முதல் அமலுக்கு வரும் புது திட்டம்., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here