சிலிண்டர் மட்டுமல்ல இனி மின்சாரமும் இலவசம்., நாளை முதல் அமலுக்கு வரும் புது திட்டம்., வெளியான அறிவிப்பு!!!

0
சிலிண்டர் மட்டுமல்ல இனி மின்சாரமும் இலவசம்., நாளை முதல் அமலுக்கு வரும் புது திட்டம்., வெளியான அறிவிப்பு!!!
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த வாக்குறுதிகளை இப்போது ஒவ்வொன்றாக தெலுங்கானா மாநிலத்தின் நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில முதல்வர் சில நாட்களுக்கு முன் மாநிலம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 500 ரூபாய் மானியத்தில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கு முன்னதாக இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தெலுங்கானா மாநில முதல்வர் தீவிரம் காட்டி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here