தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக வெளியான உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 7 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பல மாநிலங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகத்திலும் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா வைரஸ் பரவலின் 2ம் அலை தொடங்க உள்ளதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே இது குறித்து கடந்த 9ம் தேதி தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்குமாறு பரிசீலித்தனர். மேலும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கலாமே என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது இது குறித்து தமிழக அரசு இறுதி முடிவை அறிவித்து உள்ளது. அதில், தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக வெளியான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.