ரொனால்டோவுக்கு 1839 கோடியை அள்ளி கொடுக்க தயார்…, வலை வீசும் சவுதி அரேபியா…, வெளியான தகவல்!!

0
ரொனால்டோவுக்கு 1839 கோடியை அள்ளி கொடுக்க தயார்..., வலை வீசும் சவுதி அரேபியா..., வெளியான தகவல்!!
ரொனால்டோவுக்கு 1839 கோடியை அள்ளி கொடுக்க தயார்..., வலை வீசும் சவுதி அரேபியா..., வெளியான தகவல்!!

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகியதை அடுத்து, சவுதி அரேபியா கிளப் ஒன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது.

ரொனால்டோ:

உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் H யில் இடம்பெற்றுள்ள ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி முதல் போட்டியில், கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னிலை பெற்றது. இந்த போட்டியில், ரொனால்டோ ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து 5 உலக கோப்பையிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அடைந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கடுத்ததாக, நாளை உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி விளையாட தயாராகி வருகிறது. இந்த உலக கோப்பையின் தொடக்கத்தில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து ரொனால்டோவை நீங்கி உள்ளதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. ரொனால்டோவும் அதனை சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிபடுத்தி இருந்தார்.

FIFA உலக கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேற யாருக்கு வாய்ப்பு அதிகம்?? மெஸ்ஸி அணிக்கு சான்ஸ் இருக்கா?? முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில், சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் ஒன்று ரொனால்டோவுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது. இந்த கிளப்பானது கிட்டத்தட்ட 3 ஆண்டுக்கு 1839 கோடி ரூபாய் ரொனால்டோவுக்கு தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து ரொனால்டோ எந்த பதிலும் அளிக்காததால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here