தமிழகத்தில் மது விற்பனை செய்யும் நேரத்தை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்ற கூடாதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றம் கேள்வி :
தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது, மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. தொற்றின் பரவல் சற்று குறைந்ததால், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இந்த நேரத்தை தமிழக அரசு ஏன் குறைக்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஏன் மாற்றக்கூடாது, என அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்., சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம்!!
விரைவில் இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கும் நேரம் குறைப்பதற்கான சாத்திய கூறுகள், உருவாகியுள்ளது.