சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லவ் டுடே திரைப்படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனது நீண்ட நாள் ஆசை குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்:
சினிமா துறையில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் 2k கிட்ஸ் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் வசூலை பின்னுக்கு தள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் பிரதீப்பை தோளில் வைத்து கொண்டாடும் அளவுக்கு ஹிட் அடித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது ஆசை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. அதனால் தான் இந்த படத்தில் நானே நடித்தேன். மற்றவர்கள் சொல்லுற மாதிரி இந்த படத்தில் நடிக்க யாரும் வரவில்லை என்றும், அதனால் தான் நான் நடித்தேன் என்று சொல்லுவது உண்மை இல்லை.
அப்பப்பா., ஒரே லுக்கில் இளசுகளை தவிக்க விடும் ஐஸ்வர்யா மேனன்., வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!
மேலும் கோமாளி படத்திற்கு பிறகு 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு நடிக்கணும் ஆசை ஆசை இருந்ததால் என் படத்தை இயக்கி நான் நடித்தேன். இதை தவிர எனக்கு எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு என அடுத்தடுத்து பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது என கூறியுள்ளார்.