விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்க மலை கோவிலில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற இன்று (டிச. 10) பிரதோஷம் மற்றும் நாளை (டிச.11) மாத சிவராத்திரி உள்ளதால், பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் சதுரகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதுகாப்பு நலன் கருதி இன்று முதல் 4 நாளைக்கு பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்!!!