விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. TRP ல் முன்னிலை வகிக்கும் இந்த சீரியலில் எப்போது ரோகிணி மாட்டுவார் என்று தான் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்கும் தருணத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகையின் வாழ்வில் நடந்த சோகமான செய்தி ஒன்றை அவர் பகிர்ந்து உள்ளார். அதாவது இதில் நடிகை விஜயாவுக்கு தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பாக்கியஸ்ரீ.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழில் திருவிளையாடல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊசி போட்டு குண்டாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது உள்ள காலகட்டங்களில் எல்லா நடிகையும் குண்டாக தான் இருந்தார்கள். அதனால் நானும் என்னை குண்டாகிக் கொள்ள ஊசி போட்டேன். ஆனால் அதுவே என் கர்ப்ப காலத்தில் எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நான் நடிப்பிற்காக செஞ்ச விஷயம் என் வாழ்க்கையை பாதித்துவிட்டது என கண்கலங்கி பேசிய பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக மக்களே.., கைநிறைய சம்பளத்துடன் முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.., உடனே முந்துங்க!!