சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

0

சசிகலா இன்று தமிழகத்திற்கு வருகிறார். அவர் தமிழகத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது காரை துரத்தி வழிமறித்து சசிகலாவுடன் செலஃபீ எடுத்துக்கொண்டார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.

சசிகலா:

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பின்பு பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று தமிழகத்திற்கு சசிகலா வந்து கொண்டுள்ளார். பெங்களூர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக இல்லத்தில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்களை தூவி தனது மரியாதையை செலுத்தினார். ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட காரில் சசிகலா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட தனது காரில் வருகிறார். இதனால் மீண்டும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக காவல்துறை சசிகலாவிற்கு ஓர் எச்சரிக்கையை விடுத்தது. தமிழக எல்லையான ஓசூரில் வைத்து அதிமுக கொடியை தனது காரில் இருந்து அகற்றவில்லை என்றால் சசிகலா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் சசிகலா தனது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றினார்.

இளைஞருடன் செலஃபீ:

ஆனால் அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட மற்றொரு காரில் சசிகலா தற்போது வருகிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரமடைந்துள்ளனர். தற்போது தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா. மேலும் அவர் காரில் பயணித்த போது ஓர் இளைஞர் அவரது காரை துரத்தி அவரது காரை வழிமறித்தார்.

‘கோவையில் இன்று தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாம்’ – 21 யானைகள் பங்கேற்பு!!

உடனே சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை அப்புறப்படுத்த முயற்சித்தனர். பின்பு அந்த இளைஞரிடம் பேசிய சசிகலா அவரது விருப்பத்தை கேட்டு அந்த இளைஞரின் விருப்பத்திற்கேற்ப அவருடன் செலஃபீ எடுத்துக்கொண்டார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சசிகலா வரும் இடங்களில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here