சசிகலா ஜன.27 இல் விடுதலை செய்யப்படுவாரா??சிறை நிர்வாகம் தகவல்!!

0

தற்போது உடல் நலம் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது விடுதலை குறித்த ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா:

ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கடந்த 2017ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிறகாக சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தனை ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகளவிற்கு வரும் 27ம் தேதி சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இவரது ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் சசிகலா சிறையில் இருக்கும் பொழுது கடந்த 20ம் தேதி அன்று உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதுகுறித்து பல புகார்கள் எழுந்தது. மேலும் அவருக்கு சிறையில் சிகிச்சை முறையாக வழங்கவில்லை என்று சசிகலாவின் சகோதரன் குற்றம் சாட்டினார். தற்போது சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவருக்கு கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் சசிகலா, தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் முழுமையாக உணவு உண்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்.

சிக்கன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா?? மத்திய அரசு விளக்கம்!!

உறுதியாக விடுதலை:

தற்போது இவரது உடல் நல குறைவால் இவரது விடுதலை தேதி தள்ளிபோகுமா? என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி இருக்கும் வகையில் ஓர் தகவல் வெளிவந்துள்ளது. வரும் 27ம் தேதி அன்று சசிகலா உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்றும் சிறையில் இருந்து விடுவிப்பதற்காக அதிகாரிகள் தீவிரமாக பணிகளை செய்து வருவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரிடம் கையெழுத்து பெற்று அவர் விடுதலை செய்யப்படுவர் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here