தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தந்து மகனின் புகைப்படத்தை முதமுதலாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சரத்குமார்
தமிழில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். நாளடைவில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்க பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார்.
நாட்டாமை தான் இவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்தது. அதன் பிறகு சூரிய வம்சம், சமுத்திரம் போன்ற குடும்ப கதாபாத்திரமும் இவருக்கு ஒத்து போகவே அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது.
மேலும் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே திருமணம் ஆன நிலையில் சில வருடங்களிலேயே அந்த திருமணம் விவகாரத்தில் முடிந்தது.
அதன் பிறகு தன்னுடன் பல படங்களில் நடித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து அரசியலில் களமிறங்கினர். தற்போது கூட பணமோசடி வழக்கில் கூட சிக்கினர். தற்போது சரத்குமார் தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.