சர்ச்சையை கிளப்பிய தோனியின் புகைப்படம் …! – கடுப்பான நெட்டிசன்கள் !!!

0

குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்  தோனி  அவர்கள். அங்கு அவர்  எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ,  ‘மரக்கன்றுகளை நட்டு ,காடுகளை காப்பாற்றுங்கள் ‘ என்று குறிப்பிடப்பட்ட வரிகளுக்கு அருகே நின்று அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த  புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி , கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்தவர்.  தனது தலைமையிலான அணியை மிக நேர்த்தியாக வழிநடத்துவதில் வல்லவர். தற்போது  இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். மேலும் இவரின் ரசிகர்கள் உட்பட அனைவரும் அவரை ‘தல’ என்ற செல்ல பெயர் வைத்து அழைக்கின்றனர்.

இந்நிலையில் IPL  போட்டிகள் கொரோனாவால் ஒத்திவைக்கபட்டதால், சுற்றுலா தளமான சிம்லாவிற்கு தனது குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து வருகிறார்  கேப்டன் தோனி. இந்நிலையில் அங்கு அவர்  இருந்த உணவகத்தின் ஒரு பகுதியில்  ‘மரக்கன்றுகளை நட்டு ,காடுகளை காப்பாற்றுங்கள்’ என்ற வரிகள் எழுதப்பட்டு இருந்தது. இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட தோனி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், ‘ மரத்தை வெட்டி அதன் மூலம் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு செய்வதா ?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே அந்த உணவகத்தின் நிர்வாகம், ‘ மர ஆலைகள் மூலம் கழிவாக வீசப்பட்ட மரத்திலையே இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தாக’ ஒரு விளக்கத்தை தெரிவித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here