விபரீத ஆசையால் கேரியரை தொலைத்த சந்தானம் – ச்ச.. இப்போ நிலைமை இவ்வளவு மோசமா ஆயிடுச்சா!

0
விபரீத ஆசையால் கேரியரை தொலைத்த சந்தானம் - ச்ச.. இப்போ நிலைமை இவ்வளவு மோசமா ஆயிடுச்சா!

நடிகர் சிம்பு கொடுத்த வாய்ப்பால் காதல் அழிவதில்லை, அலை, மன்மதன் ஆகிய படங்களில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் சந்தானம். இவர் அதற்கு முன்பே லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி இருப்பார். இவர் அடிக்கும் timing வசனங்கள் ஒர்க் அவுட் ஆக தமிழ் சினிமாவில் சந்தானத்திற்கு மவுசு கூடியது.

ஓகே ஓகே, சகுனி, கலகலப்பு, பாஸ் என்கிற பாஸ்கரன், நண்பேன்டா ஆகிய படங்கள் இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது. ஆனால் ஒரு காலத்திற்கு பின்னர் சந்தானம் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார். மேலும் தில்லுக்கு துட்டு, A1 ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால் தற்போது இவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் சந்தானம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்யா நடித்த கேப்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் கலந்துகொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்க சந்தானத்திற்கு போன் போட்ட ஆர்யா என்ன செய்யுற என கேட்டுள்ளார், இதற்கு வீட்ல சும்மா தான் இருக்கேன் என கூறி உள்ளார் சந்தானம். சரி இங்கயும் வந்து சும்மா இரு அப்படினு சொல்லி தான் தன்னை ஆர்யா அழைத்ததாகவும் நகைச்சுவையாக கூறினார் சந்தானம். மேலும் தற்போது பழையபடி காமெடி வேடங்களில் நடிக்கவும் சந்தானம் தயாராகி விட்டாராம். இதை முன்பே செய்திருக்கலாம் என இவரின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here