ஆலியாவிற்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் குழந்தையை பார்க்க ஐலா பாப்பா பிரசவ அறைக்குள் ஓடி வருகிறார். அந்த வீடியோவினை பார்த்த பலரும் அந்த தருணத்தை கண் முன் பார்த்தது போல கண் கலங்கியுள்ளனர்.
ஐலா பாப்பா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
பிரசவ அறைக்கு ஆலியா செல்லும்போது அந்த ஒவ்வொரு தருணங்களையும் சஞ்சீவ் பதிவு செய்துள்ளார். அதாவது ஆலியா பிரசவ வலியால் துடிக்கிறார். இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் சிறிய குழந்தையை பெற்றெடுக்க போகிறோம் என்கிற குஷியிலும் இருக்கிறார்.
பின்பு பிரசவ அறைக்குள் ஆலியா செல்கிறார். அந்த திக் திக் நிமிடங்கள் அனைத்தையுமே சஞ்சீவ் கடந்து கொண்டிருக்கிறார். பிரசவ அறைக்குள் அழுகுரல் கேட்கிறது. உடனே சஞ்சீவ்வும் எப்போது குழந்தையை பார்க்க போகிறோம் என காத்து கொண்டிருக்கிறார். குழந்தையை பிரசவ அறையில் இருந்து வெளியே கொண்டு வரும் போது குழந்தையை பார்க்க ஐலா பாப்பா ஓடி வரும்படியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்