மாறுவேடத்தில் சென்று ராதிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தாத்தா – வெளியான அதிரடி ப்ரோமோ!

0
மாறுவேடத்தில் சென்று ராதிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தாத்தா - வெளியான அதிரடி ப்ரோமோ!
மாறுவேடத்தில் சென்று ராதிகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தாத்தா - வெளியான அதிரடி ப்ரோமோ!

ராதிகாவிடம் கோபி குறித்தான அனைத்து உண்மைகளையும் எப்படியாவது கூறி விட வேண்டும் என நினைத்து தாத்தா முயற்சி செய்து வருகிறார். தற்போது ராதிகா இருக்கும் வீட்டை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார். ராதிகாவும் கோபியும் திருமணம் செய்துகொள்ள போகிற விஷயம் தாத்தாவுக்கு ஏற்கனவே தெரியும். ஆனாலும், பாக்கியாவை மனதில் வைத்து கொண்டு கோபியை கண்காணித்து கொண்டே இருக்கிறார். இதற்கு பிறகு ராதிகாவும் கோபியும் ஒன்றாக பார்க்கில் சுத்துவதை பார்த்து எழில் தாத்தாவிடம் கூறுகிறார்.

எவ்வளவு சொல்லியும் அடங்கவில்லையா என கூறி பாக்கியாவும், கோபியும் இருக்கும் புகைப்படத்தை எப்படியாவது ராதிகாவிடம் காட்டிவிட வேண்டும் என நினைத்து புகைப்படத்துடன் ராதிகாவை சந்திக்க செல்கிறார். ஆனால் ராதிகா வீட்டை காலி பண்ணி சென்றுவிடுகிறார்.

இதற்கு பிறகும் விடாது தாத்தா இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் கூறிவிட வேண்டும் என நினைத்து கோபியை பின் தொடர்கிறார். கோபிக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடாமல் இருக்க மாறுவேடத்தில் சென்று ராதிகா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க செல்கிறார். ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் தாத்தா கூறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here