இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு…, மனம் உருகி விடைபெற்றார்!!

0
இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு..., மனம் உருகி விடைபெற்றார்!!
இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு..., மனம் உருகி விடைபெற்றார்!!

இந்தியாவின் டென்னிஸ் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா, துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுடன் தனது ஓய்வினை அறிவித்தார்.

சானியா மிர்சா:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் 2023 ம் ஆண்டுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கியது. பெண்கள் மட்டும் பங்கு பெற்று விளையாடும் இந்த தொடரில், இந்தியா சார்பாக சானியா மிர்சா, அமெரிக்க வீராங்கனையான லியுட்மிலா சாம்சோனோவா உடன் இணைந்து இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடர் தான் தனது, சர்வதேச அளவிலான இறுதி தொடராக இருக்கும் என சானியா மிர்சா முன்பே அறிவித்திருந்தால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வந்தது. இதில், நேற்று சானியா மிர்சா-லியுட்மிலா ஜோடி, ரஷ்ய ஜோடியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த இந்திய ஜோடி, 2வது செட்டையும் (0-6) தவறவிட்டது. இதனால், துபாய் ஓபன் டென்னிஸின் முதல் சுற்றிலேயே சானியா மிர்சா ஜோடி வெளியேறியது.

இந்த தொடருடன், சானியா மிர்சாவும் சர்வதேச அரங்கில் தனது ஓய்வினை அறிவித்தார். இதனை தொடர்ந்து, பேசிய சானியா மிர்சா, எனது வாழ்க்கையில் டென்னிஸ் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அது முழு வாழ்க்கை கிடையாது என டென்னிஸ் விளையாடிய துவங்கிய போதே மனதை தயார்படுத்திக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இவர், சர்வதேச அளவில், 2015ஆம் ஆண்டில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய, பிரெஞ்சு மற்றும் யூ எஸ் ஓபன்களில் இரட்டையர் பிரிவில், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது, ஓய்வுக்கு பல முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here