‘டுபாக்கூர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டுபாக்கூர் சனம்’ – மீரா மிதுன் ட்விட்டால் கடுப்பான ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டை விட்டு வெளியேறிய சனம் ஷெட்டிக்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் சனம் வீட்டை விட்டு வந்ததும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி பிக் பாஸ் பாஸ் வீட்டில் பேசிக்கொண்டே இருந்தாலும் தற்போது அவர் இல்லாதது ஏமாற்றத்தையே தருகிறது. பலரும் ‘நோ சனம், நோ பிக் பாஸ்’ என்ற ஹாஸ்டேக்கை பகிர்ந்தும் வருகின்றனர். மேலும் பிக் பாஸ் வேண்டும் என்றே சனத்தை வெளியேற்றியதாகவும் பலரும் திட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இவர் நிஜமாகவே வீட்டை விட்டு வெளியேறினாரா?? இல்லை சீக்ரட் ரூமில் இருக்கிறாரா?? என்ற சந்தேகம் அனைவர்க்கும் எழுந்து தான் வருகிறது. ஆனால் அவர் நிஜமாகவே வீட்டை விட்டு வெளியேற தான் செய்தார். ஏனெனில் ட்விட்டரில் அவர் தனது ப்ரொபைல் போட்டோவை மாற்றியுள்ளார்.

மேலும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இத்தனை நாட்கள் தனக்கு சப்போர்ட் செய்த மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார் சனம் ஷெட்டி. இப்படி அனைவரும் சனம் ஷெட்டிக்கு ஆதரவு அளித்து வர தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லி திரியும் மீரா மிதுன் சனம் பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

பிக்பாஸ் தலைவராக தேர்வாகும் அனிதா!!

சனம் பற்றி மட்டுமல்ல பிக் பாஸ் பற்றியே கூறியுள்ளார். அதாவது டுபாக்கூர் நிகழ்ச்சியில் இருந்து டுபாக்கூர் வெளியேறி விட்டார் என்று கூறியுள்ளார். இதற்கு சனமும் யார் டுபாக்கூர் என்று மக்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனால் மீரா மிதுனை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here