பிக்பாஸ் தலைவராக தேர்வாகும் அனிதா – கடுப்பான அர்ச்சனா குரூப்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். சனம் கடைசி வரை நின்று விளையாடுவார் என்று பார்த்தால், மக்கள் அனைவரை இவ்வளவு சீக்கிரமாக வெளியேற்றிவிட்டனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து கமல் நிஷாவிற்கு பல அட்வைஸ்களை கொடுத்து அவரை காண்டாக்கி விட்டார் என்றே சொல்லலாம். இதுவரையிலும் ஒரு சிலரே தனித்தனியாக விளையாடி வருகின்றனர். அர்ச்சனா, ரியோ, நிஷா என பலரும் குரூப்பிஸம் தான் நடத்தி வருகின்றனர். இதுவரையிலும் யாருக்கும் சலிக்காத விதத்தில் கேமை விளையாடி வந்த சனம் செட்டியை வெளியேற்றியது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடைசி நிமிடத்தில் சனம், அனிதா, ஷிவானி இருந்ததும் அனிதா இல்லையெனில் ஷிவானி வெளியேறுவார் என்று நினைத்தால் சனம் வெளியேறிவிட்டார். ஷிவானி என்ன விளையாடுகிறார் என்று அவருக்கு ஓட்டு போட்டார்கள் என்று தெரியவில்லை.

சரி சனத்தை சீக்ரட் ரூமில் வைப்பார்கள் என்று பார்த்தால் வெளியேற்றியே விட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் ப்ரோமோ வெளியானது. அதில் இந்த வாரம் அனைவருமே தலைவர் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளது. இறுதியில் அனிதா, நிஷா போட்டியிடுகின்றனர். அதில் அனிதா ஜெயித்து விட பாலாஜி, ரம்யா ஷிவானி அவரை கட்டிப்பிடித்து சந்தோசப்படுகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி செய்த காரியம்!!

அந்த பக்கம் அர்ச்சனா குரூப்புக்கு முகம் முழுவதும் கொந்தளிக்கிறது. அடுத்த ப்ரோமோவில் ஆரி சரியான சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார். அதாவது சனம் தனியாக நின்று விளையாடியவர்.

அடுத்தடுத்து இப்படி வெளியேறினால் அர்ச்சனா குரூப் வலிமையாகி விடும் என்று ஆரி கூறுகிறார். அதற்கு பாலாஜி நான் இதை தானே 2 வாரத்திற்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருக்கேன் என்று கூறுகிறார். ஆரியின் இந்த கூற்று மக்கள் அனைவர்க்கும் சரியாகவே படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here