கொரோனா பரவல், நிவர் புயல் ஆகிய காரணங்களுக்காக ஏற்கனவே இரு முறை ஒத்திவைக்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வுகள் நாளை (டிச.,8) நடைபெற இருந்த நிலையில் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைத்துளளனர்.
தேர்வு ஒத்திவைப்பு:
பட்டய கணக்காளர் தேர்வெழுத குறைந்தபட்சம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது என இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் புதிய அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதற்கிடையில் நாடு முழுவதும் நிவர் புயல் காரணமாக நவம்பர் 27ம் தேதி நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நாளை (டிச.,8) சிஏ தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் அது டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவித்துளளது. தேர்வுகள் திட்டமிட்டபடி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் டிசம்பர் 13ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை நடைபெறும் எனவும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.