உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங், தங்கள் நிறுவன கிளைகளில் பணிபுரிய 1000 புதிய பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
புதிய வேலை:
பன்னாட்டு உற்பத்தி நிறுவனமான சாம்சங், இந்தியா முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் அதிகம். தற்போது இந்த நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி பெங்களூர், நொய்டா, டெல்லி உள்ளிட்ட கிளைகளில் இயங்கும் சாம்சங் ஆர் அண்ட் டி இன்ஸ்டியூட் நிறுவனங்களில் பணிபுரிய, 1000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், இந்நிறுவனத்தில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுபோக, முன்னணி ஐஐடிகளான மெட்ராஸ், டெல்லி, ஹைதராபாத், ரூர்கி மற்றும் காரக்பூர் போன்ற நிறுவனங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொறியாளர்களை, ஆரண்டி நிறுவனங்களில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பணியமர்த்தப்பட்ட இந்த ஊழியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டுக்குள் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய தொடங்குவார்கள் என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் மின்னணு தொழில் துறையில், மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.