தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா அக்கினேனி. தற்போது மாலத்தீவுக்கு கணவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருந்த சமந்தா நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை பார்த்த சமந்தா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.
சமந்தா ட்வீட்
தமிழில் முன்னணி நடிகையான சமந்தா அவரது கணவரான நாகசைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பலரும் அவர் அவரை திட்டியும் வந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கல்யாணம் ஆனதுக்கு பிறகும் இப்படி போட்டோவை வெளியிடலாமா?? இதனை உங்கள் வீட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் என்றும் பேசி வந்தனர். ஆனாலும் எதையுமே காதில் வாங்காத சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தான் இருந்தார். அதன் பிறகு தற்போது நாடு திரும்பி இருக்கும் சமந்தா வந்த உடன் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அந்த படம் அவருக்கு பிடித்து போனதாம். மேலும் அதில் சூர்யாவின் நடிப்பும் அபாரம் என்றே சொல்லலாம். சமந்தாவிற்கு மட்டுமல்ல இந்த படம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சூர்யா மட்டுமல்ல அந்த நாயகியும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஒவ்வொருவரும் இப்படி ஒரு மனைவி கிடைக்க மாட்டார்களா?? என்ற அளவிற்கு இவரின் நடிப்பு இருந்தது.
இந்த படத்தை பற்றி சமந்தா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தமாதிரியான இன்ஸ்பிரேஷன் எனக்கு தேவை என்று கூறி அழுகும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதாவது படம் வந்து ஒரு மாதம் ஆன நிலையில் இப்பொழுது வந்து சொல்றிங்க என்று கூறியுள்ளனர். சிலர் ரொம்ப சீக்கிரம் வந்து ரிவியூ போட்ருக்கிங்க என்று கூறி வருகின்றனர்.
Film of the year #SooraraiPottru . What a gem ?.. @Suriya_offl ??? #SudhaKongara ❤️❤️❤️ @Aparnabala2 ?.. @PrimeVideoIN .. Outstanding .. just the inspiration I needed ? pic.twitter.com/0BCCc2SmQm
— Samantha Akkineni (@Samanthaprabhu2) December 1, 2020