இந்திய திரையுலகில் மாடலிங் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு சினிமா என பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சமந்தா ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது வழக்கம். தற்போது வொர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமந்தா
மாடலிங் துறையில் தான் முதன்முதலில் கால் பதித்தார் சமந்தா. அதன்பின் தமிழில் ‘மாஸ்கோவில் காவிரி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சில விளம்பரங்களில் நடித்திருந்தார். பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் நடித்திருப்பார்.
ஆரம்பத்தில் அவ்வளவு பிரபலம் சமந்தாவிற்கு கிடைக்கவில்லை. அதன்பிறகு ‘பானா காத்தாடி’ படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்திருப்பார். அதன்பின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கிலும் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன்பிறகு தமிழில் நீதானே என் பொன்வசந்தம், கத்தி, அஞ்சான், தெறி மற்றும் மெர்சல் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகின. இது ஒரு புறம் இருக்க லாக்டவுன் சமயத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்தார்.
தற்போது ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மேலாடையை கழட்டி போஸ் குடுத்துள்ளார். இது வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.