விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் ரிலீசான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சமந்தா பேசியுள்ள கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓபன் டாக்:
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வெளியான நாள் முதல் தொடர்ந்து, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக, சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து போய்விட்டது. தற்போது, சமந்தா இந்த படத்தில் தனது பாத்திரம் பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது,
இந்த கதாபாத்திரத்தை கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி. எனக்கு இந்த மாதிரி காமெடி ஜானர் படங்கள் தான் பிடிக்கும் என்றும், நான் நிஜத்தில் ஒரு நகைச்சுவை பெண்மணி அதாவது ஃபன்னி கேர்ள் என்று குறிப்பிட்டுள்ளார். நான் எதிர்பார்த்ததை விட உங்களது அதீதமான அன்பை கொடுத்து விட்டீர்கள், அதற்காக நான் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தாவின் இந்த பதிவு, சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்